Thursday, 28 April 2016

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ... நன்றி ....

பாவங்களின் 42 வகை

வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

Wednesday, 20 April 2016

2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI act தகவல்

கணினியின் பாஸ்வேர்டை மறந்தால்....?

19/04/2016

            கணினிகளில் ரகசிய குறியீட்டு சொற்களான ‘பாஸ்வேர்டு’ கொடுத்து பணி செய்வது பாதுகாப்பானது. 
          ஆனால் நமது பாஸ்வேர்டை மறக்க நேர்ந்தால் என்ன செய்வது? இதோ அதற்கான வழி... கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் நிர்வகிக்கும்போது இந்த சிக்கலை தீர்ப்பது எளிது. அட்மின் பாஸ்வேர்டையே மறந்தால், அதற்கு தீர்வு காண்பது சிக்கலான வழி முறையாகும். மாறாக துணை கணக்கு களின் பாஸ்வேர்டு மறந்துபோனால் கீழ்க்காணும் வழியைப் பின்பற்றலாம்... விண்டோஸ் 7 இயங்குதளம் என்றால் Ctrl + Del + Alt என்ற விசைகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் புதிய திரை திறக்கும். அதில் சுவிட்ச் யூசர் (Switch User) ஆப்சனை கிளிக் செய்யவும். விண்டோஸ் 8 இயங்குதளம் என்றால் யூசர் முகவரியின் இடது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும். இப்போது பாஸ்வேர்டு தெரிந்த மற்ற அட்மின் கணக்கு வழியாக உள்ளே நுழையவும். இப்போது அந்த கணக்கில் இருந்து மறந்துபோன யூசர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்ற முடியும். பின் புதிதாக பாஸ்வேர்டு கொடுத்துக் கொள்ளவும். அல்லது கண்ட்ரோல் பேனல் வழியாக User Accounts and Family Safety / User Accounts Add or remove user accounts. செல்லவும். இப்போது எந்த கணக்கின் பாஸ்வேர்டு மறந்ததோ, அந்த கணக்கை தேர்வு செய்யவும். உடனே பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளவும், கணக்கை நீக்கவும் ‘ஆப்சன்’ திறக்கும். பாஸ்வேர்டை மாற்றுவதென்றால் மாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் கணக்கையே நீக்கிவிட்டு புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். மற்றொரு வழியில் பாஸ்வேர்டு தவறு என்று சுட்டிக்காட்டும்போது அதில் தெரியும் ‘ரீசெட் பாஸ்வேர்டு’ ஆப்சனில் நுழையவும். இப்போது ‘நெக்ஸ்ட்’ கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். அதில் புதிய பாஸ்வேர்டு கொடுத்து உறுதி செய்து கொண்டு வெளியேறவும். மூன்றாவது வழியில் மாற்று அட்மின் கணக்கின் வழியாக உள்ளே நுழைந்து ரன் கமாண்ட் பெட்டியில் வைத்து விண்டோஸ் பொத்தானையும் +X பொத்தானையும் அழுத்தவும். இப்போது திறக்கும் ஆப்சனில் Command Prompt (Admin) என்பதை கிளிக் செய்யவும். இதிலும் புதிய கணக்கின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொடுக்கலாம்.

TET Certificate Genuineness Proposal Apply to CEO only/TRB

20/04/2016

Director's Proceedings: Date: 15.4.2016

  1. TET Certificate Genuineness Proposal Apply to CEO only/TRB - Click Here






Monday, 18 April 2016

RTI:TRB ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை.

2003, 2004, 2005,  2007
Trb ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும்  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை  செய்ய வேண்டியதில்லை என்ற RTI தகவல்.

Sunday, 10 April 2016

தேர்வு நிலை /சிறப்பு நிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்திட -அரசு ஆணை பட்டியல் விபரம்

பத்து ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலைக்கு கல்வி சான்றின் உண்மை தன்மை தேவையில்லை RTI Letter

RTI தகவல்: துறைத் தேர்வு எழுத செல்வதற்கு,அந்த நாளை, எந்த ஒரு அரசுப்பணியாளரும் பணிகாலமாக(ON DUTY) துய்க்கலாம்.

தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய வழிமுறைகள்!!!

மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக உயர்த்தப்பட்ட அரசாணை !

Saturday, 2 April 2016

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான நடத்தை விதிகளில் சில

1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது.
2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.
3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது.தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.


5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம்செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..

CPS pension Clarification Letter Regarding

Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1 Dt: April 01, 2016 PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.