பிளஸ் 2 தேர்வு: காலால் எழுதிய மாணவன்
05/03/2016
நாமக்கல்மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று பிளஸ் 2தேர்வு நடந்தது.
தமிழ் முதல் தாள் தேர்வை, அரசு உதவி பெறும் பள்ளியான குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுதிறனாளிகள் பள்ளியை சேர்ந்த மகேஷ்குமார், 18, என்ற மாணவர், தன் இரு கைகளும் இல்லாத நிலையில், தன் காலால் தேர்வு எழுதினார்.
இவரதுதந்தை மஞ்சுநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம், பல்லேருஹள்ளி கூலி தொழிலாளி. 2014ல் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், காலால் எழுதி, 500க்கு, 273
மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment